அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப், தமக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறும் என்பதை உறுதிசெய்துள்ளார்.
அந்தச் சந்திப்பு, அடுத்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி இடம்பெறும் என்று தனது டுவிட்டர் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
உலக அமைதிக்கான மிகச் சிறந்த தருணமாக அதனை உருவாக்கத் தாங்கள் இருவரும் முயற்சி மேற்கொள்ளப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.