சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாருக்கு எதிராக ஆயுதம் தாங்கி போரில் ஈடுபட்டு வரும், கிளர்ச்சிக்குழுக்கள், இராணுவத்தின் ஒரு பிரிவு ஆகியவற்றை ஒடுக்கும் பணியில் அதிபர் ஆதரவு படையினர் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகின்றனர். 6 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுச் சண்டையில் இலட்சக்கணக்கான மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில் உள்ள டவுமா நகரில் நேற்று (07) கிளர்ச்சியாளர்களை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் சுமார் 150 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.