ஜேர்மனில் உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் 31 வயதான அமெரிக்க பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தொடர்பில் உரிய தகவல்கைள வழங்குமாறு அமெரிக்க உயர்ஸ்தானிகராலயத்திடம் ஜேர்மன் நாட்டு வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் ஜேர்மனின் வெளிநாட்டு புலனாய்வு நிறுவனமொன்றில் பணிபுரியவதாக சந்தேகம் வெளியிடப்பட்டது.
இருப்பினும் குறித்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை வெளியிட ஜேர்மன் அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜேர்மன் அதிகாரிகள் கூடிய கவனத்துடன் விசாணைகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.