பிரேஸில் கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரரான நெய்மர் காயமடைந்துள்ளதால் இந்த உலகக் கிண்ண தொடரில் இனி விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த அதிர்சி செய்தியானது பிரேஸில் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கொலம்பியாவுக்கு எதிராக நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் பிரேஸில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியில் ஜேர்மனியை சந்திக்கிறது.
ஆனால் ஜேர்மனிக்கு எதிரான முக்கியமான அரையிறுதிப் போட்டியில், கிண்ணத்தை வெல்லும் கனவுடன் விளையாடி வரும் பிரேஸில் அணிக்கு அடிமேல் அடி விழுந்துள்ளது.
அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் போட்டியின் போது கீழே தள்ளிவிடப்பட படுகாயம் அடைந்து ‘ஸ்ட்ரெச்சரில்’ தூக்கிச் செல்லப்பட்டார். இவர் இனி இந்த உலகக் கோப்பை போட்டியில் விளையாட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது பி.ரேஸில் இரசிகர்களுக்கு பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை கொலம்பியாவுக்கு எதிராக முதல் கோலை அடித்த பிரேஸில் அணித்தலைவர் தியாகோ சில்வா மஞ்சள் அட்டை வாங்கி அடுத்த போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் ஜேர்மனிக்கு எதிரான முக்கியமான அரையிறுதிப் போட்டியில், கிண்ணத்தை வெல்லும் கனவுடன் விளையாடி வரும் பிரேஸில் அணிக்கு அடிமேல் அடி விழுந்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் போட்டியின் போது கீழே தள்ளிவிடப்பட படுகாயம் அடைந்து ‘ஸ்ட்ரெச்சரில்’ தூக்கிச் செல்லப்பட்டார்.
இவர் இனி இந்த உலகக் கோப்பை போட்டியில் விளையாட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கொலம்பியாவுக்கு எதிராக முதல் கோலை அடித்த பிரேஸில் அணித்தலைவர் தியாகோ சில்வா மஞ்சள் அட்டை வாங்கி அடுத்த போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கொலம்பியாவுக்கு எதிரான போட்டியின் இறுதித் தருணங்களில் நெய்மர், கொலம்பிய வீரர் யுவான் கேமிலோ சுனைகாவுடன் மோதிக் கொண்டார்.
இதில் நெய்மார் கீழே விழ, உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை சோதித்து பார்த்போது முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளமை தெரியவந்தது.
இவர் இவ்வாறு காயமடைந்ததற்கு போட்டிமத்தியஸ்தர்களின் தாராள மனப்போக்குதான் காரணம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது.
ஸ்பானிய நடுவர் கார்பெலோ கொலம்பியா, பிரேஸில் வீரர்கள் இருவரும் செய்த ஆக்ரோஷமான ஆள் தாக்குதல் ஆட்டத்தைக் கண்டு கொள்ளாமல் சுதந்திரமாக விட்டது கடைசியில் நெய்மர் காயத்தில் வந்து முடிந்துள்ளது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது குறித்து பிரேஸில் பயிற்றுவிப்பாளர் ஸ்கொலாரி கூறுகையில் , எதிரணியினர் நெய்மாரைக் குறிவைத்துத் தாக்குகின்றனர் . இது குறித்து எவரும் கவனித்திற் கொள்ளவில்லை என்றார்.
காயம் ஏற்படுத்திய கொலம்பிய வீரர் சுனைகா கூறுகையில், “நான் எந்த வீரரையும் காயப்படுத்தவேண்டும் என்று ஆடுவதில்லை. ஆனால் நான் களத்தில் இருக்கும்போது நான் எனது அணிக்காக ஆட வேண்டும், நான் அணிந்த சீருடைக்கு நன்றிக்கடன் பட்டவனாக ஆடவேண்டும்.
யாரையும் காயப்படுத்தும் எண்ணம் இல்லை” மேலும் அவருக்காகா பிரார்த்துக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
ஜேர்மனி அணி உலகக் கிண்ணத்தை வெல்லும் கனவுடன் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
நெய்மரின் சவாலை அரையிறுதியில் சந்திக்கவேண்டியிருக்காது என்று அந்த அணி ஓரளவுக்கு மகிழ்ச்சி அடைந்திருந்தாலும், இது பிரேஸிலின் ஆக்ரோஷ ஆட்டத்தை அதிகரிக்கவே செய்யும், அந்த அணி நெய்மருக்காகவே இந்த உலகக் கிண்ணத்தை வெல்ல மேலும் கடுமையாக முயற்சி செய்யும். ஆகவே ஜேர்மனிக்கு எதுவும் சுலபமில்லை என்று தெரிகிறது.