மனித உறுப்புகளில் மிகவும் முக்கியமானது மூளை. ஏனெனில் அதன் அடைப்படையில் தான் உடலின் பல செயல்பாடுகள் நடைபெறுகிறது.
அறிவாற்றல், சிந்தனைத் திறன், கற்றல், ஞாபகம், உணர்ச்சிகள் என உயிர்ப்புள்ள அனைத்து விஷயங்களுக்கும் அடிப்படை மூளைதான்
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மூளையை நம்முடைய அன்றாட பழக்க வழக்கங்கள் கூட எளிதில் பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
காலை உணவை தவிர்த்தல்
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும்.
புகை பிடித்தல்
புகை பிடிப்பதனால் மூளை சுருங்கவும், அல்ஸீமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. நிறைய இனிப்புச் சாப்பிடுவதனால் புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
அதிகமாக சாப்பிடுவது
அதிகளவாகச் சாப்பிடுவதனால் மூளையில் இருக்கும் இரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதனால் நமக்குத் தேவையான ஆக்சிஜனை பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்சிஜன் செல்லா விட்டால் மூளை பாதிப்படையும்.
தூக்கமின்மை
நல்ல உறக்கம் இல்லாமையால் மூளைக்கு ஓய்வு இல்லாமல் போகின்றது. தேவையான அளவு தூங்காமலிருப்பது நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதிகமாக வேலை
மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள்
உருவாகின்றன.
சர்க்கரை பயன்படுத்துதல்
அதிக சர்க்கரையைச் சேர்த்துக்கொள்வது, புரோட்டீன் சத்துகள் உட்கிரகிப்பதை குறைக்கும். அதனால் ஏற்படும் சத்து குறைபாடு நரம்புகளின் வளர்ச்சியைக் குறைத்து, மூளையையும் பாதிக்கும்.
மன அழுத்தம்
மன அழுத்தம், நரம்பு மண்டலத்தில் பல்வேறு பாதிப்புகளை உண்டாக்குகிறது. மன அழுத்தம் அதிகமானால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்படும் ஆபத்தும் உண்டு.
ஹெட்போன் பயன்படுத்துதல்
30 நிமிடம் தொடர்ந்து ஹெட்போன் பயன்படுத்தினால் உங்களின் காதையும், மூளையையும் சேர்த்தே இது பாதிக்க செய்து விடுமாம்.
போர்வைக்குள் தூங்குதல்
தலையை மூடிக்கொண்டு நித்திரை செய்வதனால் போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறைக்கிறது.